புதிய செயலாளர்கள் நியமனம்


வடமாகாண பேரவைச் செயலகத்தின் செயலாளராக திருமதி ரூபினி வரதலிங்கம்  ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை மகளிர் விவகாரம் புனர்வாழ்வளித்தல் சமூக சேவைகள் , கூட்டுறவு , உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில்முனைவோர் மேம்பாடும் வர்த்தக வாணிப அமைச்சின் செயலாளராக  ஆர் .வரதீஸ்வரன் ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆளுநர் செயலகத்தில் இன்று (11) பிற்பகல் இடம்பெற்ற  இந்த நிகழ்வில்  நியமனக்கடிதங்கள்  ஆளுநரால் வழங்கப்பட்டதுடன் இந்த நியமனங்கள்  2019 ஜுலை 15ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments