மைத்திரிக்குப் பைத்தியம் - சுமந்திரன் சாடல்

“போதைப்பொருள் வர்த்தகம் நடத்தியே தமிழர் ஆயுதப் போராட்டம் நடந்ததாக ஜனாதிபதி சொல்லியிருப்பது ஒட்டுமொத்த தமிழர் போராட்டத்தையே கொச்சைப்படுத்தும் செயல். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். வரலாறு தெரியாமல் உளறுதல் சரியல்ல…”
இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் , ஜனாதிபதி சட்டத்தரணியுமான சுமந்திரன் எம் பி .
நேற்றுக் காலை கொழும்பில் நடந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்ரி , பிரபாகரன் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு ஆயுதப் போராட்டத்தை நடத்தியதாக குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பில் கடும் விசனத்தை வெளியிட்டு அதற்கு பதில் தெரிவித்த சுமந்திரன் மேலும் கூறியதாவது ,
“பிரபாகரன் நடத்திய போராட்டத்திற்கு தமிழ் மக்களின் ஆதரவு இருந்தது. புலம்பெயர் தேசங்களில் இருந்து தமிழர்கள் அதற்கு பெருமளவான நிதிப் பங்களிப்பை செய்திருக்கிறார்கள்.இந்த பின்னணியில் வரலாறு தெரியாமல் உளறி இப்படி ஜனாதிபதி கூறுவது முற்றுமுழுதான தவறு.அதனை நான் கண்டிக்கிறேன்.இது ஆயுதப்போராட்டத்தை கொச்சைப்படுத்தும் ஒரு பொய்த்தகவல்.இப்படி ஒரு குற்றச்சாட்டு முன்னெப்போதும் இருந்ததில்லை.”
இப்படித் தெரிவித்தார் சுமந்திரன் .

No comments