சத்தியமாக தெரியாதென்கிறார் ஆனோல்ட்?


5Gஅலைகற்றை கோபுரங்களை அமைக்க இலஞ்சம் பெற்றதான குற்றச்சாட்டுக்களின் மத்தியில் அது பற்றி தனக்கு ஏதும் தெரியாதென அவர் மறுதலித்துள்ளார்.
யாழ்ப்பாண மாநகர சபையால், 5ஜி வலையமைப்பு அமைப்பது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாதென, யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இ.ஆர்னோல்ட் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவடடத்தில், ஸ்மாட் கோபுரங்கள், பல இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்ற போதிலும், யாழ். மாநகர சபையின் எல்லைக்குள் மட்டும் நடப்படுவதாகவும் அதில் 5 ஜி அலைக்கற்றை பொருத்தப்படவுள்ளதாக சில நபர்கள் அரசியல் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு ஸ்மார்ட் கோபுர விடயத்தில் அரசியல் இலாபம் தேட முனைகின்றவர்களை மக்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டுமென, வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
இலங்கையிலேயே இல்லாத 5ஜி தொழில்நுட்பம் யாழ்ப்பாணத்தில் மட்டும் வரப்போகின்றது என போராடடம் நடத்துகின்றனர். இவர்கள் எமது மக்களை முட்டாள்கள் என்று நினைத்தனர் போல உள்ளது. ஆனால் எமது மக்கள் அனைத்தையும் நன்கு அறிவார்கள் எனவும் அவர் கூறினார்.
இதன்போது கருத்து தெரிவித்த யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இ.ஆர்னோல்ட், யாழ்ப்பாண மாநகர சபையால், 5ஜி வலையமைப்பு அமைப்பது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. நாம் அவ்வாறான உடன்படிக்கை எவற்றையும் செய்யவில்லை.
நாம் ஸ்மாட் கோபுரத்தின் ஊடாக மின்விளக்கு, கண்காணிப்புக் கமரா போன்ற சில அத்தியாவசிய விடயங்கள் தொடர்பிலேயே பொருத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். வெளியில் உள்ள சிலர் கூறுவது போன்று நாம் 5ஜி வலையமைப்பு பொருத்த எந்த உடன்படிக்கையும் செய்யவில்லை என்றார்.

No comments