கன்னியாவில் கழிவு வீச்சு:பதற்றம்?


கன்னியா வென்னீரூற்று பகுதியில் உள்ளிட்ட தமிழர் தம் பூர்வீக மண்ணிற்கு செல்லவிடாது தமிழ் மக்கள் இன்று தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.இதனிடையே அங்கு பிள்ளையார் ஆலயத்தின் காணி உரிமையாளரான வயோதிப தாய் மற்றும் இந்து மத துறவி மீது பிக்கு ஒருவர் தேனீர் மற்றும் கழிவுகளை வீசியமை பதற்றத்தை தோற்றுவித்துள்ளது.

இதனையடுத்து பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அத்துடன் காவல்துறை வீதித்தடையினையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கன்னியா நில ஆக்கிரமிப்பு தொடர்பில் ஆராய பொது அமைப்புக்கள் இன்று காலை கன்னியாவில் சந்திப்பொன்றிற்கு அழைப்புவிடுத்திருந்தன.

எனினும் அங்கு சென்றவர்களை உள்ளே செல்லவிடாது காவல்துறை தடுத்துள்ளது.

இந்நிலையிலேயே தற்போது மக்கள் வீதி தடை முன்னர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மறுபுறம் ஆலய வளிவினுள் காவல்துறை பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்ட பிள்ளையார் ஆலயத்தின் காணி உரிமையாளரான வயோதிப தாய் மற்றும் இந்து மத துறவி மீது பிக்கு ஒருவர் தேனீர் மற்றும் கழிவுகளை வீசியமை பதற்றத்தை தோற்றுவித்துள்ளது.

No comments