கஞ்சா எடுத்து சென்ற காவலர் கைது?


யாழ் சிறைச்சாலை காவலர் கஞ்சா, புகையிலை மற்றும் சிகரட் என்பனவற்றை சிறைக்குள் எடுத்துச் சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.

 _இன்று பிற்ப்பகல் குறித்த போதைப் பொருட்களை சிறைக்குள் எடுத்துச் சென்ற போது , சிறைச்சாலைக் காவலர்களால் சோதனைக்குட்படுத்திய போது கஞ்சா, புகையிலை மற்றும் சிகரட் போன்ற போதைப் பொருட்களை மறைத்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

யாழ்.சிறைச்சாலைக்குள் கைதிகளிற்கு விற்பனை செய்யவென சிறைக்காவலர் ஒருவரால் எடுத்துச்செல்லப்பட்ட கஞ்சா, புகையிலை மற்றும் சிகரட் என்பவை கைப்பற்றப்பட்டுள்ளது. சிறைக்குள் இவற்றினை களவாக எடுத்துச் சென்ற போது குறித்த சிறைக்காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று செவ்வாய் பிற்;பகல் குறித்த போதைப் பொருட்களை சிறைக்குள் எடுத்துச் சென்ற போது , சக சிறைச்சாலைக் காவலர்கள் அவரை சோதனைக்குட்படுத்திய போது கஞ்சா, புகையிலை மற்றும் சிகரட் போன்ற போதைப் பொருட்களை மறைத்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கைதான சிறைக்காவலர் இலங்கை காவல்துறையிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.

No comments