தமிழக மீனவர்கள் 6 பேர் சிறையில் அடைப்பு!

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேர் சிறீலங்காப் கடற்படையால் கைது செய்யப்பட்டசெய்யப்பட்டுள்ளனர்.

கச்சதீவு கடற்பரப்பில் அண்மித்த இந்தியக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட புயலால் படகு கட்டுப்பாட்டை இழந்து இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைந்த போது ரோந்தில் ஈடுபட்ட கடற்படையினர் படகில் இருந்த ஆறு மீனவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் இராதநாதபுரம் மாவட்டம் நம்புதாளையைச் சேர்ந்த சங்கர், நாகூர், கிரசைன், ராஜூ , சித்தி, பாலமுருகன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றவர்கள் நேற்று அதிகாலை கச்சதீவு கடற்பகுதியில் கைதுஸசெய்யப்பட்டுள்ளனர்.

 ஆறு பேரையும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு விசாரணைக்குக் கொண்டுசெல்லப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் மாவட்ட மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

புதிய சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

விசாரணை நடத்திய நீதிபதி அந்தோணிப்பிள்ளை ஜூட்சன், ஜூலை 26 வரை அவர்களை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

தற்போது மீனவர் 6ஆறு பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

No comments