மைத்திரியை பாராட்டுகின்றார் மறவன்புலோ?


உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட அதுரலிய ரத்ன தேரரின் கோரிக்கையினை நிறைவேற்றிய இலங்கை ஜனாதிபதிக்கு ஈழம் சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இன்றிரவு அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இலங்கை தீவில் சிவபூமியில் மண்ணின் மரபுகளை காக்கக் காலவரையற்ற உண்ணா நோன்பு கைக்கொண்ட வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தின தேரரின் கோரிக்கைகளில் இரண்டை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றியமையைப் பாராட்டுகிறேன்.

கிழக்கு மாகாணச் சைவத் தமிழ் மக்களின் நெடு நாள் கோரிக்கையை நிறைவேற்றிய இலங்கை அரசைப் பாராட்டுகிறேன்.

குறிப்பாக  ஆளுநர்களாக இருந்த இருவரும் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தைக் கொண்டுவரும் நடவடிக்கையாகத் தங்கள் பதவிகளை விட்டு கொடுத்ததைப் பாராட்டுகிறேன்.

வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தின தேரரின் எஞ்சிய கோரிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்றி மீண்டும் வளர்ச்சிப் பாதையில் மக்களைத் திசைதிருப்பிச் செல்வமும் செழிப்பும் மிக்க நாடாக இலங்கையை மாற்றவேண்டும்.அத்துடன் இனங்களுக்கிடையே நல்லுறவும் நல்லிணக்கமும் அன்பும் அருளும் அறனும் நிலைக்க வேண்டுகிறேனெனவும் மறவன்புலோ சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

No comments