உயிரைக் காப்பாற்றிய தற்படம்!

ஒருவர் எடுத்த தற்படம் அவரது உயிரையே காப்பாற்றியுள்ளது என்பதை உங்களால் நம்பமுடியுமா

அது என்னவெனில் கேரளா மாநிலத்தின் சங்கனாச்சேரியைச் சேர்ந்த வாலிபர் 
ஒருவர், தனது மனைவியுடன் சண்டைப் போட்டுவிட்டு வெளியே வந்து வாழ்க்கை வெறுத்துப்போன அந்த இளைஞன் தொடரூந்தில்  பாய்ந்து உயிரை மாய்த்துக் கொள்ள   யாரும் இல்லாத நேரமாக சங்கனாச்சேரி தொடரூந்து தண்டவாளத்தில் வந்து படுத்துக் கொண்டார். 

பின்னர் தன்னை அப்படியே தற்படம்  எடுத்து ‘வெறுப்பாக இருக்கிறது நண்பர்களே. போதும் வாழ்ந்தது. அதனால், தற்கொலை செய்யப்போகிறேன்’ எனக் கூறி வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தியாக புகைப்படத்துடன் அனுப்பி விட்டு படுத்துக் கொண்டுள்ளார். 

இதனை பார்த்த அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக களத்தில் இறங்கிய அவர்கள், அவர் எங்கு படுத்திருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க வேண்டி, பல குழுக்களுக்கு அந்த ஒளிப்படத்தை அனுப்பியுள்ளார். 

அந்த படத்தில் 82 எனும் எண்ணுடன் ஒரு மைல் கல் இருந்துள்ளது. இதைவைத்து விசாரிக்க ஆரம்பித்தனர். அந்த இடம் சங்கனாச்சேரி தொடரூந்து நிலையம் என தெரிய வந்தது. 

அதன்பின்னர் தொடரூந்து நேரகாப்பாளருக்கு   தெரியப்படுத்தி உறவினர்களும் நண்பர்களுமாக சென்று அந்தஇளைஞனைகாப்பாற்றியுள்ளனர்.

No comments