சுமந்திரன் டெல்லி வந்தால் தீர்வில்லை:அர்ஜுன் சம்பத்!


பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு ஈழத்தமிழர்களிற்கு முற்றுமுழுதாக உதவுமென இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அர்ஜுன் சம்பத் தனக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக ஈழம் சிவசேனை தலைவர் சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசு அதிலும் பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு. ஈழத் தமிழ் மக்களுக்கு எதையும் செய்யவில்லை எனவும் செய்யப் போவதும் இல்லை எனவும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அண்மையில் குற்றஞ்சுமத்தியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள அர்ஜீன் சம்பத் இலங்கை ஆதிகாலம் தொட்டுச் சிவபூமி இருந்தது.அதன் பின்னரே ஏனைய மதங்கள் வந்திருந்தன.

ஈழத் தமிழர்கள் சைவர்கள் அவர்கள் சார்பில் இதுவரை எந்தக் கட்சியும் பேசவில்லை.
தமிழர் சார்பில் பேசுவோர்கள் கிறிஸ்தவர்களே .அவ்வாறு பேசுவோரின் நோக்கம் சைவர்களைக் கிறிஸதவர்கள்; ஆக்குவதே.

தூண்டுதல் மதமாற்றத்தையோ கட்டாய மதமாற்றத்தையோ பிரதமர் மோடியை கடுமையாக எதிர்க்கிறார்.

திருக்கேதீச்சரம் திருக்கோயில் கட்டுவதற்கு இந்திய அரசு பல கோடி ரூபாய்களை வழங்கியது. மதமாற்றம் ஒன்றையே நோக்கமாகக் கொண்ட மெதடிஸ்த சபையில் துணைத் தலைவராக இருப்பவர் ஆபிரகாம் சுமந்திரன்.
மாதந்தோறும் இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்று மதமாற்றப் பணிகளை மட்டுமே மேற்கொள்பவர் அவரது துணைவியார் சாவித்திரி சுமந்திரன்.

தமிழர்களுக்கு எதிரான சைவர்களுக்கு எதிரான கடும் போக்குடைய இவர்கள் இருவரும் பிரதமர் மோடியை சந்திக்கப் போனால் பிரதமர் மோடி உதவமாட்டார்.

ஈழத்தமிழர் சார்பாளராக இவர்கள் போவதை இந்திய அரசு விரும்பவில்லை எனப் பலமுறை எடுத்துக் கூறியுள்ளது .

அண்மைக் காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தில்லி வந்த பொழுதும், கிறித்தவர்களை உங்கள் சார்பாக அனுப்பாதீர்கள் எனப் பாரதிய சனதாக் கட்சியின் மூத்த தலைவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

ஈழத்தமிழர்களுக்கு சிறப்பாக சைவர்களுக்கு உதவி வேண்டுமானால் அரசியல் தீர்வைக் கொண்டு வர வேண்டுமானால் சைவ தலைமை உள்ள கட்சிகள் பாரதப் பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும்.பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு முற்று முழுதாக உதவுமெனவும் அர்ஜீன் சம்பத் தெரிவித்துள்ளார்.

No comments