ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் எதிர்ப்பு!

காவிரி டெல்டா பகுதியில் அமைக்கப்பட இருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இதனால் தமிழக மக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை அனுமதி வழங்க கூடாது.

தமிழக மக்களின் கருத்துக்களை கேட்காமல் இந்த திட்டத்தை அமல்படுத்தக் கூடாது. இது மட்டும் அல்ல தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையும் மக்களிடம் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் மத்திய, மாநில அரசுகள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எனவே இந்த 2 பிரச்சினைகள் பற்றியும் பாராளுமன்றத்தில் பேசுவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி திருச்சியில் ஊடகவியலாளர்களுக்கு கூறியுள்ளார்.

No comments