இராணுவ டிரக் மோதி பொதுமகன் பலி!


இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு வவுனியா வடக்கு நெடுங்கேணி பாடசாலை முன்னால் ராணுவ வாகனம் மோதி பொதுமகன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நெடுங்கேணி சேனைப்பிலவைச்சேர்ந்த பேரம்பலம் (53வயது) என்னும் குடும்பஸ்தரே சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார்.

முல்லைத்தீவிலிருந்து வந்த இராணுவ டிரக் ரக வாகனம் எதிரே பாடசாலை முன்னால் துவிச்சக்கர வண்டியில் திரும்ப முற்பட்ட மேற்படி குடும்பஸ்தரை மோதியுள்ளது.வீதிக்கடவைக்கான மஞ்சள்கோடு தாண்டி மோதித்தள்ளியதில் குடும்பஸ்தர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். 

இதனிடையே மேற்படி சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து 300மீற்றர் தொலைவில் கடந்தவாரம் பெரும்பான்மையினத்தவரின் எல்வ் ரக வாகனம் மோதியதில் நெடுங்கேணி ஓட்டோ உரிமையாளர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்ததாக உள்ளுர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments