மாவை தான் மீண்டும் தலைவர்




இலங்கை தமிழரசு கட்சியின் 16வது தேசிய மாநாடு நாளை இடம்பெறவுள்ளது. இன்றைய தினம் தமிழரசு கட்சியின் மாதர் முன்னணி மாநாடு, வாலிப முன்னணி மாநாடு ஆகியனவும் இன்று இடம்பெற்றன.

இன்று காலை நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுக்குழு தொிவு இடம்பெற்றது. இதன்போது தமிழரசு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராஜா பொதுக்குழு தலைவராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.

இந்த பொதுக்குழு தெரிவில் தமிழரசு கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினருமான இரா .சம்பந்தன் , மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , தமிழரசு கட்சியின் மூத்த தலைவர்கள் , பொதுச்சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .

இதேவேளை தமிழரசு கட்சியின் 16வது தேசிய மாநாடு,நாளை காலை 9 மணிக்கு தந்தை செல்வா சதுக்கத்தில் மரியாதை வணக்கத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து யாழ் .வீரசிங்ம் மண்டபத்தில் மாநாடு இடம்பெறும்.

No comments