சிறையில் அரசியல் கைதி மரணம் - கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு

தமிழ் அரசியல் கைதி ஒருவர் சிறையில் உயிரிழந்தமையைக் கண்டித்தும் சிறையிலுள்ள ஏனைய தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நாளை மறுதினம் திங்கட்கிழமை பிற்பகல் 3 மணியளவில் யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடைபெறும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


No comments