வீதியைத் தேடி வீதியில் இறங்கியது முன்னணி




யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்கு உள்பட்ட பொது வீதியினை தனியார் ஒருவர் அபகரித்துவைத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , அவ்வீதியினை பொதுமக்களின் பாவனைக்காக திறந்துவிடுமாறும் கோரியும் இன்று சனிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்.நகரின் மத்தியில் அமைந்துள்ள கடை தொகுதிகளின் மத்தியில் குறித்த வீதி காணப்படுகின்றது. அந்த வீதிக்கு அருகில் உள்ள கடை உரிமையாளர் அபகரித்து அதனை தனது கடையுடன் இணைத்துள்ளமையால் அவ்வீதி ஊடாக போக்குவரத்து செய்ய முடியாத நிலமை காணப்படுகின்றது.

எனவே குறித்த வீதியினை பொது போக்குவரத்திற்கு திறந்து விட வேண்டும் என கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

No comments