திருகோணமலையில் கடைவிரிக்கும் புத்தர்?



ஐக்கியதேசியகட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டது போல் கிழக்கு மாகாணத்தில் ஆயிரம் புத்தர் சிலையை நிறுவும் திட்டத்தை சத்தமின்றி அரங்கேற்றி வருகின்றது.இதேவேளை அவர்களுடன் இணக்க அரசியல் நடாத்தும் தலைமைகள் கண்டும் காணாமல் உறங்கிக்கிடக்கின்றனரென பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த திருகோணமலை பட்டினமும் பிரதேசசபை உறுப்பினர் விபூசன் குச்சவெளி, கும்பிறுபிட்டி, திரியாய், புல்மோட்டை, திருகோணமலை நகரப்பகுதிகளிலும் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளது, தென்னமரவாடி பிரதேசத்தில் நிறுவப்படுகின்றது.

பல இடங்களில் அடாத்தாக புத்தர் சிலைகள் நிறுவப்படுகின்றது. சில இடங்களில் வெசாக்,பொஷன் தினங்களில் புத்தர் சிலைகள் நிறுவப்படுகின்றது, பண்டிகை தினம் நிறைவடைந்து விடுகின்றது, எனினும் புத்தர் சிலைகள் நிலைகொண்டு விடுகின்றன.

ஆசாபாசங்கள், சொத்து சுகம் அனைத்தையும் விடுத்து துறவறம் பூண்ட புத்தரின் பெயரில் நில ஆக்கிரமிப்புகளை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றார்கள், கேட்க வேடிக்கையாக இருந்தாலும் அது எமக்கு வேதனையான விடயம். இவ்வாறான செயற்பாடுகள் சிறுபான்மை இனங்கள் மத்தியில் உள்ளக்கிளர்ச்சியினை உண்டு பண்ணுகின்றன என்பதில் ஐயமேதுமில்லை.

பொசன் தினத்தை முன்னிட்டு திருகோணமலை பேருந்து நிலையத்தின் முன்பாக நிறுவப்பட்ட புத்தர் சிலை கூட அங்கிருந்து அகற்றப்படப்போவதில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments