விசாரணைக்காக மீண்டும் முன்னிலையாகிய ஹிஸ்புல்லாஹ்

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று முன்னிலையாகியுள்ளார்.

காலை 09.45 மணியளவில் முன்னிலையாகிய ஹிஸ்புல்லாஹ் உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலின் பின்னர், மறுநாள் பாசிக்குடா பிரதேச ஹோட்டல் ஒன்றில் வைத்து சவூதிஅரேபியா பிரஜைகள் சிலரை சந்தித்தமை, முஸ்லிம்கள் 100 பேருக்கு ஆயுதங்கள் வழங்கியதாக இந்திய ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்த கருத்து உள்ளிட்ட 03 சம்பவங்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே சென்றுள்ளார்.

No comments