புறப்பட்டது தமிழரசு குண்டர் படை?


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களது போராட்டத்தினை ஈபிடிபி போராட்டம் எனவும் தண்ணியடித்துவிட்டு போராடுகின்ற கிழவிகள் எனவும் நையாண்டிய பண்ணியவர்கள் தமிழரசு சயந்தனின் எடுபிடிக்கும்பலென அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

எப்படியேனும் ஒட்டுண்ணி வாழ்க்கை வாழ்ந்து தமக்கு கதிரை பிடித்துக்கொள்வதில் தமிழரசுக்கட்சி சார்ந்தவர்கள் பரம்பரை பரம்பரையாக சாதித்துக்கொள்பவர்களாவர்.

இப்போதும் அதன் அடுத்த தலைமுறையொன்று புறப்பட்டிருக்கின்றது.

போராட்ட காலங்களிலும் பதுங்கி சொந்த அலுவல் பார்த்த இத்தகைய கும்பல்களே இன்று வெயிலாலும் முதுமையாலும் விழுந்து போயுள்ள தம்மை நையாண்டி செய்வதாக குடும்பங்கள் குற்றஞ்சுமத்துகின்றன.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மது போதையில் வந்தே போராட்டத்தில் ஈடுபட்டனர் என தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் சிலர் குற்றம் சுமத்தியமை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்தியில் கொதி நிலையை ஏற்படுத்தி இருந்தது.

யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்றைய தினம் தமிழரசு கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு நடைபெற்றது. அதன் போது மண்டபத்தின் வெளியே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவ்வேளை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வந்த தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் சிலர் , சிவசக்தி ஆனந்தனின் தூண்டுதலில் தானே இங்கே வந்தீர்கள் , அவரின் மண்டையன் குழுவால் எத்தனை பேர் காணாமல் போனார்கள் என உங்களுக்கு தெரியாதா ? அவரிடம் சென்று அவர்களால் காணாமல் போனவர்கள் பற்றி கேளுங்கள் என கூறினார்கள்.

அத்துடன் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவினால் எவ்வளவு பேர் காணாமல் போனார்கள். அவர்கள் அலுவகத்தின் முன்னால் சென்று போராட்டத்தை நடத்துங்கள். என கூறினார்கள்.

அதேவேளை அரசுடன் இணைந்திருக்கும் அங்கஜன் இராமநாதன் மற்றும் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரிடம் போய் காணாமல் போனோர் தொடர்பில் கேளுங்கள் என கூறினார்கள்.

அதற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அவர்களிடம் நாம் ஏன் போய் கேட்க வேண்டும். நாங்கள் கூட்டமைப்புக்கே வாக்களித்தோம். கூட்டமைப்பே எங்கள் உறவுகளின் தகவல்களையும் அரசியல் கைதிகளின் விடுதலையையும் சாத்தியமாக்குவோம் என கூறி வாக்கு கேட்டார்கள். அவர்களே செய்ய வேண்டும்.

உள்ளூராட்சி சபைகளில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் அரசாங்கத்துடன் இணைந்து ஆட்சி அமைத்தது கூட்டமைப்பே. அப்போது அவர்களுடன் கூடி குழாவி விட்டு தற்போது எங்களை அவர்களிடம் போங்கள் என அனுப்புகிறீர்களா ? என பதில் கேள்விகள் கேட்டனர்.


அதனால் அவ்விடத்தில் இரு தரப்புக்கும் இடையில் கடும் வாய் தர்க்கம் ஏற்பட்டது. அதன் போது தமிழரசு கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த பெண்களை நோக்கி மது போதையில் போராட வந்தீர்களா ? என கேட்டனர். அதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடும் கோபத்திற்கு உள்ளாகி கடுமையான வாய் தர்க்கத்தில் ஈடுபட்டனர். அதன் போது அவ்விடத்திற்கு வந்த சிலர் கட்சி உறுப்பினர்களை அங்கிருந்து அழைத்து சென்றனர்.

அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தொடர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்தனர். மதியம் 12 மணி முதல் 2 மணி வரையில் கடுமையான வெயிலுக்கும் மத்தியில் வீதியில் நின்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர். 

No comments