ஜனநாயகப் போராளிகளையடுத்து டக்ளசுடன் பசில் இரகசிய சந்திப்பு

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர் பசில் ராஜபக்சவுக்கும் ஈ பி டி பி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எம்.பிக்குமிடையில் இரகசிய சந்திப்பொன்று இன்று பத்தரமுல்லையில் உள்ள பொதுஜன பெரமுன அலுவலகத்தில் நடந்தது.

அடுத்த தேர்தல் மற்றும் இதர அரசியல் செயற்பாடுகள் குறித்து இந்த சந்திப்பில் விரிவாக பேசப்பட்டுள்ளது.

இதேபோல இதர அரசியல் கட்சிகளின் தலைவர்மார்களுடனும் பசில் பேச்சுக்களை நடத்தி வருவதாக தெரிகிறது.

இதேவேளை அண்மையில் ஜனநாயகப் போராளிகளுக்கும் பசில் ராஜபக்சவிற்குமிடையில் இரகசியச் சந்திப்பு நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments