சென்னையில் பதுங்கியிருந்த சஹ்ரானின் கூட்டாளிகள் கைது!

இலங்கை குண்டுவெடிப்புச் சம்பவத்தின் சூத்திரதாரி சஹ்ரானின் கூட்டாளிகள் என கருதப்படும் 3 நபர்கள் சென்னையில் பூந்தமல்லி எனும் இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்

கேரள மாநிலத்தில் கைதுசெய்யப்பட்ட ரியாஸ் அபுபக்கர் வழங்கிய தகவலின் அடிப்படையில்  முதலில் சென்னை மண்ணடியை சேர்ந்த  வாலிபர் ஒருவனை கைதுசெய்த என்.ஐ.ஏ., மற்றும் தமிழக கேள்விப்பிரிவு காவல்துறையினர் பின்னர் பூந்தமல்லி வீட்டுக்கு சென்றபோது  அங்கே இலங்கையைச் சேர்ந்த, மூன்று பெண்கள், மூன்று ஆண்கள் மற்றும் ஒரு குழந்தையம்  இருந்ததாக  கூறப்படுகிறது.

அங்கிருந்த ஆண்களிடம்  நடத்திய விசாரணைகளின் படி ஒரு சில மாதங்களின் முன்பே சென்னை வந்து வாடகைக்கு குடியேறியதாகவும் , இருவர் விமானம் மூலமாகவும் ஒருவர் கடல்மார்க்கமாக வந்ததாகவும் கூறப்படுகிறது, அதேவேளை சஹ்ரானுடன் தொடர்பில் இருந்ததும் சஹ்ரான் சென்னையில் வந்து தங்கியிருந்து சென்றதாகவும் போன்ற திடுக்கிடும் உண்மைகள் விசாரணைகளின் மூலம் கிடைத்துள்ளது என்று  இந்திய தேசிய புலனாய்வு முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments