யாழில் அமைதியான மேதினம்?


இலங்கை ஆசிரியர் சங்கம், யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம்,புதிய அதிபர் சங்கம், வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம் இணைந்து நடத்திய மே தின கூட்டம் காலை 10 மணிமுதல் மதியம் 1.00 மணிவரை நடைபெற்றது.

ஈஸ்ரர் திருநாளன்று பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு மெழுகுதிரி கொழுத்தி அஞ்சலி நிகழ்வுடன் கூட்டம் ஆரம்பமாகியது. தொழிற்சங்க தலைவர்களது உரை இடம்பெற்றது. 2019 மே தினச் செய்திகளும் வழங்கப்பட்டன.
கூட்ட நிறைவில் கலந்துரையாடல் இடம்பெற்று கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

No comments