பிணை அனுமதி:நீதிமன்று கைவிரித்தது?

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருடைய புகைப்படம் மற்றும் மாவீரா்களின் புகைப்படங்கள், பதாகைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவா்களின் பிணை விண்ணப்பம் நிராகாிக்கப்பட்டுள்ளது. 
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் பல்கலைக்கழக மாணவா்களுக்கு பிணை வழங்குமாறு சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து பிணை விண்ணம் ஒன்றிணை முன்வைத்திருந்தனா். இதனை இன்று ஆராய்ந்த நீதிவான் நிராகாித்துள்ளாா். 
இந்த வழக்குத் தொடர்பான விடயங்கள் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் ஆராயப்பட்டு வருவதனால் நீதிமன்றால் பிணை வழங்கும் கட்டளையை வழங்க முடியாது என்று நீதிவான் ஏ.எஸ்.பி போல் கட்டளையிட்டார்.
வழக்கில் மாணவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைத்த தவறுகள் தொடர்பில் வியாக்கியானமளித்த நீதிவான், அவற்றில் சிலவற்றை திருத்த முடியும் எனக் கட்டளையிட்டார்.

No comments