பதிவுத் திருமணம் செய்த முதல் திருநங்கை!

தமிழகம்  தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த  அருண்குமாருக்கும்,  திருநங்கை ஸ்ரீஜாவுக்கும் இருவீட்டாரின் சம்மதத்துடன்  திருமணம் செய்வதற்கு நிச்சயிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு ஒக்டொபர் மாதம் 14ஆம் தேதி சங்கமேஸ்வர் கோயில் இருவருக்கும் திருமணம் செய்ய முயற்சித்தனர். ஆனால் கோயில் நிர்வாகத்தினர் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க மறுத்தனர்.

இதையடுத்து அங்குக் கூடியிருந்த இளைஞர்களும், திருநங்கைகளும் கோயில் நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அதன்பிறகு காவல் துறையினரின் பாதுகாப்போடு இருவருக்கும் திருமணம் நடந்தேறியது.
இதையடுத்து தூத்துக்குடி பதிவு அலுவலகத்தில் இருவருக்கும் திருமணப் பதிவு நடந்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பதிவுத் திருமணம் செய்த முதல் திருநங்கை என்ற புகழை பெற்றுள்ளார்.

No comments