இராணுவ வழிநடத்தலில் கொலைகள்?


சிங்கள இனவாதிகளினால் படுகொலை செய்யப்பட்ட நாற்பத்தொன்பது வயதான எம்.எஸ்.பௌஸல் அமீன் கொத்தறமுல்ல, நாத்தாண்டியாவில் ஒரு தளபாட விற்பனை நிலையத்தினை நடத்தி வந்த ஒரு நாகரீகமான எல்லோரையும் மதித்து நடக்கும் எல்லா இனத்தவருடனும் அன்பாகப் பழகும் ஒரு வர்த்தகர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.மாறவில வைத்தியசாலையில் முகத்திலும் கழுத்திலும் ஆபத்தான வெட்டுக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பயனளிக்காது இறந்துள்ளார்.

இவரது வியாபார நிலையத்தில் நான்கு சிங்களவர்களுக்கு வேலை வழங்கி அவர்களின் வேதனத்தைக் கூட வாரம் தோறும் தவறாது வழங்கியும் வந்துள்ளதுடன் பண நெருக்கடி என்று கேட்டால் கொடுத்து உதவியும் வந்துள்ளார்.

நான்கு பிள்ளைகளின் தந்தையான இவரின் இழப்பு குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது நான்கு பிள்ளைகளும் வயதில் மிகவும் சிறியவர்கள்.

இதனிடையே இத்தாக்குதல்களை இராணுவத்தினரே வழிநடத்தியதாக சொல்லப்படுவதை அதன் பேச்சாளர் மறுத்துள்ளார்.இராணுவ சீருடையில் கையில் துப்பாக்கியுடன் தாக்குதலாளிகளை இலங்கை இராணுவத்தினர் வழிநடத்தியமை அம்பலமாகியுள்ளது.

No comments