இந்தியா தப்பிச் செல்ல முயன்ற நான்கு முஸ்லிம் இளைஞர்கள் கைது!

இந்தியாவுக்கு தப்பிச் செல்லத் தயாராகவிருந்த  முஸ்லிம் இளைஞர்கள் நால்வர் மன்னார் - விடத்தல்தீவு, அடம்பன் ஆகிய பிரதேசங்களில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நால்வரும் மீனவர்களின் உதவியுடன் இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைதுசெய்யப்பட்டவர்கள் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களின் பின்னர், விடத்தல் தீவு, அடம்பன் பகுதிகளுக்கு வந்துள்ளமை உறுதியாகியுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.

No comments