குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய முக்கிய அரசியல் புள்ளியைப் பகிரங்கப்படுத்துவோம் - ராஜித சேனாரத்ன
குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய அரசியல் புள்ளியை இன்னும் ஒரு மாத காலத்திற்குள் பகிரங்கப்படுத்துவோம் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
கொழும்பு அலரிமாளிகையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.
தற்போதைய அடிப்படைவாத அமைப்புக்கள் அனைத்தும் முன்னாள் சிறீலங்கா அதிபர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்திலே உருவாக்கப்பட்டன. தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட அடிப்படைவாத அமைப்புக்கள் ஷரி-யா சட்டமூலத்திற்கு அமைய செயற்பட ஆரம்பித்தன.
ஷரி-யா சட்ட அடிப்படையிலே இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் செயற்பட்டன. இச்சட்டத்தின் ஊடாகவே அரபுக் கல்லூரிகளும், தனி முஸ்லிம் கற்கை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த அரசாங்கத்தில் மாத்திரம் இச்சட்டத்தை ஆதாரமாகக் கொண்டு 200 பள்ளிவாசல்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளமையினை குறிப்பிடுவது அவசியம். 2015ஆம் ஆண்டுக்கு பிறகு எவ்வித அமைப்புக்களும், பள்ளிவாசல்களும் ஷரி- யா சட்டத்தின் ஊடாக அமைக்கப்படவில்லை.
தேசிய தவ்ஹீத் அமைப்பில் பணி புரிந்த 26 பேருக்கு 2009ஆம் ஆண்டுக்கு பிறகு சம்பளம் அவசியம் இல்லாமலே வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பொறுப்பு கூற வேண்டும்.
தற்கொலை குண்டுதாரிகளுடன் எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, முன்னாள்பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தொடர்பு கொண்டுள்ளமையை புகைப்பட ஆதாரங்களின் ஊடாக அறிய முடிகின்றது.
21ஆம் திகதி நடத்தப்பட்ட குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய அரசியல் புள்ளியை இன்னும் ஒரு மாத காலத்திற்குள் பகிரங்கப்படுத்துவோம் எனத் தெரிவித்துள்ளார் ராஜித சேனாரத்ன.
கொழும்பு அலரிமாளிகையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.
தற்போதைய அடிப்படைவாத அமைப்புக்கள் அனைத்தும் முன்னாள் சிறீலங்கா அதிபர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்திலே உருவாக்கப்பட்டன. தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட அடிப்படைவாத அமைப்புக்கள் ஷரி-யா சட்டமூலத்திற்கு அமைய செயற்பட ஆரம்பித்தன.
ஷரி-யா சட்ட அடிப்படையிலே இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் செயற்பட்டன. இச்சட்டத்தின் ஊடாகவே அரபுக் கல்லூரிகளும், தனி முஸ்லிம் கற்கை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த அரசாங்கத்தில் மாத்திரம் இச்சட்டத்தை ஆதாரமாகக் கொண்டு 200 பள்ளிவாசல்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளமையினை குறிப்பிடுவது அவசியம். 2015ஆம் ஆண்டுக்கு பிறகு எவ்வித அமைப்புக்களும், பள்ளிவாசல்களும் ஷரி- யா சட்டத்தின் ஊடாக அமைக்கப்படவில்லை.
தேசிய தவ்ஹீத் அமைப்பில் பணி புரிந்த 26 பேருக்கு 2009ஆம் ஆண்டுக்கு பிறகு சம்பளம் அவசியம் இல்லாமலே வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பொறுப்பு கூற வேண்டும்.
தற்கொலை குண்டுதாரிகளுடன் எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, முன்னாள்பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தொடர்பு கொண்டுள்ளமையை புகைப்பட ஆதாரங்களின் ஊடாக அறிய முடிகின்றது.
21ஆம் திகதி நடத்தப்பட்ட குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய அரசியல் புள்ளியை இன்னும் ஒரு மாத காலத்திற்குள் பகிரங்கப்படுத்துவோம் எனத் தெரிவித்துள்ளார் ராஜித சேனாரத்ன.
Post a Comment