குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய முக்கிய அரசியல் புள்ளியைப் பகிரங்கப்படுத்துவோம் - ராஜித சேனாரத்ன

குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய  அரசியல்  புள்ளியை  இன்னும் ஒரு மாத காலத்திற்குள் பகிரங்கப்படுத்துவோம் என சுகா­தார அமைச்சர்  ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

கொழும்பு அலரிமாளிகையில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை  இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பிலேயே அவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.

தற்போதைய அடிப்­ப­டை­வாத அமைப்­புக்கள் அனைத்தும் முன்னாள் சிறீலங்கா அதிபர் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்சி காலத்­திலே உருவாக்கப்­பட்­டன. தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்­ளிட்ட அடிப்­ப­டை­வாத அமைப்­புக்கள்  ஷரி-யா சட்­ட­மூ­லத்­திற்கு அமைய செயற்­பட ஆரம்பித்தன.

ஷரி-யா சட்ட அடிப்­ப­டை­யிலே இஸ்­லா­மிய  அடிப்­ப­டை­வாத அமைப்புக்கள்   செயற்­பட்­டன. இச்­சட்­டத்தின்  ஊடா­கவே  அரபுக் கல்­லூ­ரி­களும்,  தனி முஸ்லிம்  கற்கை  நிலை­யங்­களும்   அமைக்கப்பட்­டுள்­ளன.

கடந்த அர­சாங்­கத்தில் மாத்­திரம்  இச்­சட்­டத்தை  ஆதா­ர­மாகக் கொண்டு  200 பள்­ளி­வா­சல்கள்  நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ள­மை­யினை  குறிப்­பி­டு­வது அவ­சியம். 2015ஆம் ஆண்­டுக்கு  பிறகு எவ்­வித   அமைப்புக்­களும்,   பள்­ளி­வா­சல்­களும்   ஷரி- யா   சட்­டத்தின் ஊடாக  அமைக்­கப்­ப­ட­வில்லை.

தேசிய தவ்ஹீத் அமைப்பில் பணி புரிந்த 26 பேருக்கு 2009ஆம் ஆண்டுக்கு   பிறகு   சம்­பளம் அவ­சியம் இல்­லா­மலே வழங்கப்பட்டுள்ளமை  தொடர்பில் முன்னாள்  பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ பொறுப்பு கூற வேண்டும்.

தற்­கொலை குண்­டு­தா­ரி­க­ளுடன் எதிர்க்­கட்­சியின்   பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான  விமல் வீர­வன்ச,  உதய கம்­மன்­பில, முன்னாள்பாதுகாப்பு செய­லாளர் கோத்­த­பாய  ராஜ­பக்ஷ தொடர்பு கொண்­டுள்­ள­மையை  புகைப்­பட ஆதா­ரங்­களின் ஊடாக அறிய  முடிகின்­றது.

21ஆம் திகதி   நடத்தப்பட்ட குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய  அரசியல்  புள்ளியை  இன்னும் ஒரு மாத காலத்திற்குள்   பகிரங்கப்படுத்துவோம் எனத் தெரிவித்துள்ளார் ராஜித சேனா­ரத்ன.

No comments