முன்னாள் போராளியை விடுதலை செய்ய சிறீலங்கா அதிபர் இணக்கம்!

வவுணதீவு காவல்துறையினரைக் கொலை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளி அஜந்தனை விடுவிக்க சிறீலங்கா அதிபர் மைத்திரி பால சிறீசேன இணக்கம் தெரிவித்துள்ளார்.

இத்தகவலை அமைச்சர் மனோ கணேசன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

தற்போது கிடைக்கப்பெற்றுள்ள புதிய தகவல்களின் அடிப்படையில், காவல்துறையினரைக் கொலை செய்தது தேசிய தெளஹீத் ஜமா அத்தின் மொஹமட் சஹ்ரான் குழுவினர் எனத் தெரிய வந்துள்ளதுள்ளதை அடுத்து இந்த முடிவுக்கு மைத்திரி வந்துள்ளார்.

அப்பாவியான நான்கு பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி கதிர்காமத்தம்பி ராசகுமாரன் என்ற அஜந்தனை விடுவிக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

அவரை உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி பதில் பொலிஸ் மா அதிபருக்கும், சட்டமா அதிபருக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அஜந்தனின் விடுதலை தொடர்பில் மனைவியான செல்வராணி ராசகுமாரனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என மனோ கணேசன்
 தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

No comments