அமெரிக்க தூதரகம் அருகில் விழுந்தது எறிகணை!

மத்தியகிழக்கு கடல் பகுதியில் ஈரானுடன் முறுகல் நிலையை அடுத்து போர்க்கப்பல்களையும், போர் விமானங்களையும் அமெரிக்கா குவித்துள்ள நிலையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து ஒரு மைலுக்கும் குறைவான பகுதிக்குள் எறிகணைத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாக்தாத்தில் பலத்த பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டலம் எனக் கூறப்படும்  பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தாலும்  யாரும் பாதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது அதேவேளை இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பு ஏற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது .

No comments