ஒன்பது தற்கொலைதாரிகளதும் படங்கள் வெளியீடு


உயிா்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்களுடன் தொடா்புடைய பெண் உள்ளிட்ட 9 தீவிரவாதிகளின் விபரங்கள் மற்றும் புகைப்படங்களை பொலிஸாா் வெளியிட்டுள்ளனா்.

இதில் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிம் ஷங்கரிலா நட்சத்திர ஹோட்டலில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்துவிட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இந்த தாக்குதலுடன் தொடர்புடையோர் அனைவரது சொத்துக்களும் குற்ற விசாரணைப் பிரிவினரால் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை பறிமுதல் செய்யப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம் தற்கொலைக்குண்டுதாரிகளின் சொத்துக்களுக்கு எவருமே உரிமை கோர முடியாது என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 260 பேருக்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 500 பேர் வரை படுகாயமடைந்தனர்.

இதனால் 3 தேவாலயங்களும் பெரியளவில் சேதமடைந்துள்ளன. நாட்டின் சுற்றுலாத்துறை வீழ்ச்சி கண்டுள்ளது.

பாடசாலைகள் இரண்டு வாரங்களுக்கு விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



01. சங்ரில்லா ஹோட்டல் ;- மொஹம்மட் காஸீம் மொஹம்மட் ஸஹ்ரான்

02. சங்ரில்லா ஹோட்டல் ;- மொஹம்மட் இப்ராஹிம் இல்ஹாம் அஹமட்

03.சினமன் கிரேன்ட் ஹோட்டல் ;- மொஹம்மட் இப்ராஹிம் இன்ஸாப் அஹமட்

04.கிங்ஸ் பெரி ஹோட்டல் ;- மொஹம்மட் அஸாம் மொஹம்மட் முபாரக்

05.புனித செபஸ்டியன் தேவாலயம் கட்டுவாப்பிடிய நீர்கொமும்பு ;- ஹச்சி மொஹம்மட் மொஹம்மட் ஹஸ்துன்

06. புனித அந்தோனியார் ஆலயம் கொச்சிகடை ;- அலாவுதீன் அஹமட் முவாத்

07. சீயோன் தேவலயம் மட்டக்களப்பு  ;-  மொஹம்மட் நஸார் மொஹம்மட் அஸாத்

08. தெஹிவளை ;- அப்துல் லதீப் ஜமீல் மொஹம்மட்

09. தெமட்டகொடை ;- பாதிமா இன்ஹாம்

No comments