முன்னணியின் அமைப்பாளரின் வீட்டில் இரண்டரை மணி நேரம் சோதனை


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் வீட்டில் இராணுவத்தினரால் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சிய மாவட்ட அமைப்பாளரான த.ஜெகதீஸ்வரனின் வீட்டினை நேற்று முற்றுகையிட்ட இராணுவத்தினர் சுமார் இரண்டரை மணி நேரம் அவரது வீட்டினை முழுமையான சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச் சோதனை நடவடிக்கையின் போது மக்கள் போராட்டங்களில் பயன்படுத்திய பதாகைகள் பனர்கள் குறித்தே அதிகம் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புபட்டதாக ஏதேனும் பனர்கள், பதாகைகள் கிடைக்கப்பெற்றால் அமைப்பாளரைக் கைது செய்யும் நோக்குடனேயே படையினர் செயற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments