மாணவர்கள் கைதின் பின்னணியில் சுமந்திரனே - தமிழசு உறுப்பினரின் சர்ச்சைப் பதிவு



யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர், செயலாளர் மற்றும் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சலை நடத்துனர் ஆகியோரின் கைதின் பின்னணியில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனே உள்ளதாகவும் அவரின் வங்குறோத்து அரசியலுக்காகவே மாணவர்கள் பலிக்கடா ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் பதிவு ஊடகம் செய்தியொன்றினை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் இன்று அதனை உறுதிப்படுத்தும்வகையில் தமிழரசுக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் தாயளன் என்பவர் தனது முகநூலில் சுமந்திரனின் கோரிக்கைக்கு அமையவே பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் இன்று அவர்கள் சட்டமா அதிபரினின் உத்தரவின் பேரில் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்படவுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.



அவரது மேற்குறித்த பதிவு தமிழரசுக் கட்சி உறுப்பினர்களிடையே சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ள நிலையில் அப் பதிவினை அவர் மீளப் பெற்றுள்ளார். அப்பதிவு நீக்கப்பட்டுள்ளது.


நாம் முன்னர் வெளியிட்ட செய்தி வருமாறு,

பல்கலைக்கழக மாணவர்கள் கைதின் பின்னணியில் சுமந்திரன் !!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளரின் கைதின் பின்னணியில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனே இருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்தின் புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற ஐந்து மாத காலத்துள் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராகவும் அவர்களோடு ஒட்டி உறவாடி ஆதரவு அளித்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் எதிராக  பாரிய அளவில் மக்களை ஒன்றுதிரட்டி பெரும் போராட்டங்களை முன்னின்று நடத்தியிருக்கிறார்கள்.

இது ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் உள்ளிட்டவர்களுக்கும் பெரும் குடைச்சலை ஏற்படுத்தியிருந்தது. இதனால் தருணம் பார்த்து மாணவர்களை பழிவாங்கியிருப்பதாகவும் குறித்த மாணவர்களுக்குப் பக்கபலமாக முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான மக்கள் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈபிஆர்எல்எவ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்களுக்கு ஆதரவு வழங்கிவருகின்றமையும் சகிக்க முடியாத நிலையினை சுமந்தினுக்கு ஏற்படுத்தியிருந்ததாகக் கூறப்படுகின்றது.

முன்னர் இருந்த மாணவர் ஒன்றியங்களை உடைத்து மதுபானம் மடிக்கணனிகள் உள்ளிட்டவற்றை வழங்கி தேர்தல் பணிகளில் சுமந்திரன் ஈடுபடுத்தியிருந்தார். எனினும் தற்போதைய அணியினர் சுமந்திரனுக்கும் அவரது எஜமானான ரணில் விக்கிரமசிங்கவிற்கும் எதிராக நிலைப்பாட்டில் கடுமையாக நிற்பதே மாணவர்களின் கைதின் பின்னணி என்றும் இதன் மூலம் மாணவர்களை வழிக்குக் கொண்டுவர சுமந்திரன் முயற்சிப்பதாகவும் கூறப்படுகின்றது.

இதனையடுத்தே தன்மீது சந்தேகம் ஏற்படாதவகையில் கைது செய்யப்பட்ட மாணவர்களைச் சந்தித்த சுமந்திரன் அவர்களின் விடுதலைக்காக பாடுபடப்போவதாக ஊடகங்களுக்கு தெரிவித்தார். எனினும் நாடாளுமன்றில் அவசரகாலச் சட்டம் கொண்வரப்பட்டபோது முதல் ஆளாக நின்று கை உயர்த்தி அதனை ஆதரித்தவர் சுமந்திரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments