சுற்றுலாத் துறை அபாயத்தில்!


இலங்கையில் தற்கொலைத் தாக்குதல்களின் பின் சுற்றுலாத்துறை பலத்த அபாயத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

 4.4 பில்லியன் டொலர்  மதிப்புள்ளது இலங்கையின் சுற்றுலாத் துறை. தாக்குதல்களைத் தொடர்ந்து பல பயணிகள் இலங்கைக்கான தங்கள் பயணங்களை ஒத்திவைத்துள்ளனர் அல்லது ரத்துசெய்துள்ளனர்.

கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் விடுதிகளின் பதிவுகள் 186 விழுக்காடு குறைந்துள்ளதாகக் கூறப்பட்டது. தற்போது 70 விழுக்காட்டுப் பதிவுகள் ரத்துசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மொத்த வருமனத்தில்  5 விழுக்காடு சுற்றுலாத் துறையைச் சார்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments