தீவிரவாதிகளுக்கு நீதிபதிப் பதவி !!

இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள அடிப்படைவாத இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பை பிரதிநித்துவப்படுத்தும் நீபதிகள் சிலர் இருப்பதாக மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

கொழும்பில்  நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் நீதியரசர் மற்றும் ஜனாதிபதியின் அவதானத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அமைப்பினைத் தடைசெய்துவிட்டு அவ் அமைப்பினைச் சேர்ந்தவர்களை நீதிபதியாக வைத்திருக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments