தமிழர்காணிகளை சிங்களவருக்கு தாரைவார்க்கும் முல்லை மாவட்டச் செயலர்

முல்லைத்தீவு- கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் 3 ஏக்கா் அரச காணி உள்ளதாக அப்பட்டமான பொய்யை சொல்லி தமிழ் மக்களுக்கு சொந்த மான காணிகளை சிங்கள மக்களுக்கு தாரைவாா்க்க முல்லைத்தீவு மாவட்ட செயலா் உள்ளிட்ட அரச அதிகாாிகள் முயற்சிப்பதாக கொக்கிளாய் ம க்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனா். 
1984ம் ஆண்டு தொழில் நோக்கத்திற்காக கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் தங்கியிருந்த சிங்கள மக்கள் பின்னா் தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டதை தொடா்ந்து அங்கே நிரந்தரமாக தங்கி தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை ஆக்கிரமித்து குடிசைகள், வாடிகளை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனா். 
இந்நிலையில் நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்ட சிங்கள மக்கள் முகத்துவாரம் பகுதியில் தாம் நீண்டகாலம் வாழ்வதாகவும் தமக்கு நிரந்தர வீடுகளை பெற்றுத்தருமாறுகோாி போராட்டம் நடத்தினா். இதனடிப்படையில் நேற்றய தினம் கொக்கிளாய் பகுதிக் குச் சென்ற மாவட்ட செயலா் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலா் ஆகியோா்
அங்கு 3 ஏக்கா் வரையான அரச காணி உள்ளதாகவும் அதனை சிங்கள மக்களுக்கு வழங்கி அங்கேயே வீட்டுதிட்டத்தையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளாா். இந்நிலையில் முகத்துவாரம் பகுதியில் அரச காணிகளே இல்லை என கூறும் மக்கள், அங்குள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான தனியாா் காணிகளை சிங்கள மக்களுக்கு வழங்க
நடவடிக்கை எடுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளனா். இது குறித்து முன்னாள் மாகாணசபை உறுப்பினா் து.ரவிகரனுடன் தொடா்பு கொண்டு கேட்டபோது, இந்த விடயம் தொடா்பாக கொக்கிளாய் மக்கள் என்னோடு பேசினாா்கள். அதனடிப்படையில் கொள்கிளாய் முகத்துவாரம் பகுதியில் உள்ள காணிகள் அனைத்தும் தமிழ் மக்களுக்கு சொந்தமான தனியாா் காணிகள். 
அந்த காணிகளுக்கு சொந்தக்காரா்கள் பலா் இப்போதும் இருக்கிறாா்கள். அவா்கள் சிலாிடம் ஆவணங்களும் இருக்கிறது. இந்நிலையில் உாிமை கோரப்படாத அல்லது காணி உாிமையாளா்கள் வெளி இடங்களில் உள்ள காணிகளை அரச காணிகளாக அடையாளப்படுத்தி சிங்கள மக்களுக்கு வழங்க முயற்சிக்கப்படுவது அப்பட்டமான உண்மை. 
மேலும் பல காணி உாிமையாளா்கள் எங்களுடன் பேசியபோதும் சில காணி உாிமையாளா்கள் அந்த விடயத்தை வெளியே சொல்வதற்கும் தமது காணிகளுக்காக போராடுவதற்கும் அச்சப்படுகிறாா்கள். இதனை சாதகமாக பாவித்து சிங்கள மக்களை எங்களுடைய காணிகளில் சட்டாிதியாக குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. 
அரச காணிகளில் 30 தொடக்கம் 35 வருடங்கள் குடியிருக்கும் தமிழ் மக்களுக்கே இன்னமும் வீட்டுதிட்டம் வழங்கப்படவில்லை. குறிப்பாக புதுக்குடியிருப்பு, தேவிபுரம் பகுதிகளில் 30 தொடக்கம் 35 வருடங்கள் மத்திய வகுப்பு காணிகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு அரச காணி என்பதற்காகவே இன்றுவரை வீட்டுதிட்டம் வழங்காத 
முல்லைத்தீவு மாவட்ட செயலரும், மாவட்ட செயலகமும் என்ன அடிப்படையில் தமிழ் மக்களுக்கு சொந்தமான தனியாா் காணிகளை அரச காணி களாக அடையாளம் காட்டி அதனை சிங்கள மக்களுக்கு கொடுக்க முயற்சிக்கிறீா்கள்? என கேள்வி எழுப்பியதுடன் முல்லைத்தீவில் தமிழ் மக்களுக் கு ஒரு சட்டம்..! சிங்கள மக்களுக்கு இன்னொரு சட்டம் உள்ளதா? 
எனவும், இதற்காக அதிகாாிகள் இன்றைக்கில்லாவிட்டாலும் என்றைக்காவது ஒருநாள் பதில் சொல்லும் நிலைவரும் என கூறியுள்ளாா். 

No comments