ஆளுநரும் முள்ளிவாய்க்காலில் அஞ்சலித்தார்!


இறுதிப்போர் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பிரதேசத்திற்கு இன்று (21) மாலை விஜயம் மேற்கொண்ட வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்; போரில் சிக்குண்டு மரணித்த அப்பாவி பொது மக்களுக்காக அஞ்சலி செலுத்தியதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக மே 18ம் திகதியன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கெடுக்க முற்பட்ட வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கொழும்;பு அரச தலைமையினால் தடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.நினைவேந்தலிற்கு முதல்நாள் இரவு விடுக்கப்பட்ட உத்தரவின் பிரகாரம் இறுதி நேரத்தில் தனது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கான பயணத்தை கைவிட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் ஈஸ்டர் குண்டுவெடிப்பில் உயிரிழந்த மக்களிற்கான அஞ்சலி நிகழ்வு வடமாகாணசபையினால் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments