பாதுகாப்பு அச்சுறுத்தல்; ஜெர்மனில் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல்!

பாதுகாப்புக்கும் சமூக சீர்கேட்டுக்கும் அச்சுறுத்தலாக அமையும் என கருதி ஈராக்கை சேர்ந்த "அல்-சலாம்-313 " குழு உறுப்பினர்களின் வீடுகளில் தொடர் சுற்றிவளைப்பு தேடுதல் சோதனையினை பலத்த ஆயுதம் தாங்கிய சிறப்பு காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டது.

மேற்கு மாநிலமான வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில், கொலோன் பகுதியிலும் ரூர் பள்ளத்தாக்கிலும் நூற்றுக்கணக்கான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த  "அல்-சலாம்-313 " அமைப்பினர் மக்கள் கடத்தலில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும், அதே போல் ஆயுதங்கள், போதைப் பொருட்கள் மற்றும் தவறான  வர்த்தகம் செய்பவர்கள் என்னும் அடிப்படையில் இந்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன, எனினும் இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை என்று அந்நாடு ஊடங்கள் தெரிவிக்கின்றன.

No comments