கிழக்கில் புதிதாக படை முகாம்கள்


பொதுமக்களின் பாதுகாப்பினை கருதி கிழக்கு மாகாணத்தில் புதிய இராணுவமுகாம்களை அமைக்கவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்க வழங்கிய விசேட நேர்காணலின்போதே இராணுவத்தளபதி இதனைக் கூறியுள்ளார்.

இதேவேளை, பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை இராணுவத்தில் தடுத்துவைத்திருக்கும் காலத்தை அதிகரிக்குமாறு அரசாங்கத்தை கோரியுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

No comments