சிறுபாண்மையினர் பாதுகாக்கப்பட வேண்டும்

உயிர்த்த ஞாயிறு  தற்கொலைகுண்டுத் தாக்குதல்களை அடுத்து    நாட்டில்  ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைத் கருத்தில் எடுத்து சிறுபாண்மையினரை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

அரசாங்கம் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதிக்கப்படாத வகையில், நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கடந்த சில நாட்களாக இலங்கையில் சில இடங்களில் வன்முறைகள் பதிவாகி யுள்ளன.

இந்த வன்முறைகள் மேலும் பரவாமல் தடுக்கும் பொறுப்பு அரசாங்கம் மற்றும் அதிகாரிகளிடம் இருக்கின்றது என  சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது

No comments