கடலாமை பிடித்த மூவர் கைது!

யாழ்ப்பாணத்தில் கடல் ஆமை பிடித்தத மூவர்  சிறீலங்காக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட கடற்பரப்பில் கடற்படையினர் ரோந்ந்து நடவடிக்கையில் ஈடுபட்ட போது, மூவர் பைபர் படகில் மீன்பிடியில் ஈடுபட்டனர். சந்தேகத்தின் பெயரில் அவர்களை நெருங்கி படகினைச் சோதனையிட்ட போது அவர்கள் கடல் ஆமை பிடித்துக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்டு அந்த மூவரரையும் கடற்படையினர்  கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் யாழ்ப்பாணம் குருநகர்ப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. மூவரையும் கடற்படையினர் தங்களது கடற்படைத் தளத்தில் தடுத்து வைத்துள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments