பெரியார் சிலை உடைப்பு! புதுக்கோட்டையில் பதற்றம்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகில் இருந்த பெரியார் சிலை  இன்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் சிலையின் தலைப்பகுதி  உடைக்கப்பட்டுள்ளது.

காலை அப்பகுதியாக நடைபயிற்சி சென்றவர்கள் பெரியார் சிலையின் தலைப் பகுதி உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்கோட்டை எஸ்.பி செல்வராஜ் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தந்தை பெரியாரின் சிலை துணியால் மூடப்பட்டிருந்தது. ஆனால் பெரியார் பொதுவான தலைவர் என்பதால் அவரது சிலையை மூடத் தேவையில்லை என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதால் சில நாட்களுக்கு முன்புதான் சிலையிலிருந்த துணி அகற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் நேரத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தகவலறிந்து தி.க, திமுக, மதிமுக, விசிக நிர்வாகிகள் அங்கு குவிந்து வருவதால் அப்பகுதி பதற்றமாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments