மாவை மட்டக்களப்பில்! கட்சி உறுப்பினர்களுடன் சந்திப்பு!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராஜா இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டார். இதன்போது கட்சியின் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடலும் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம், மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சிரேஸ்ட துணைத் தலைவர் பொன்.செல்வராசா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், உள்ளுராட்சி மன்ற தவிசாளர்கள், கட்சியின் நிருவாகச் செயலாளர் குலநாயகம், பொருளாளர் கனகசபாபதி, மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சிக் கிளைகளின் பிரதிநிதிகள், வாலிபர் முன்னணியின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 16வது தேசிய மாநாடு விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன், கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகள், தற்போதைய அரசியல் சூழ்நிலைகள், புதிய உறுப்பினர்களை இணைத்தல் குறிப்பாக இளைஞர்களை உள்வாங்கிக் கொள்ளல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments