மீண்டும் மின்னல் தாக்கியது! முதியவர்கள் இருவர் காயம்!

யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் மின்னல் தாக்கி இருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

தென்மராட்சி மீசாலை வடக்கு தட்டாங்குள பிள்ளையார் வீதியை சேர்ந்த  65 வயதுடைய  இருவரரே மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி கை மற்றும் முதுகு பகுதிகளில் எரிந்து காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றுப் புதன்கிழமை மரம் ஒன்றின் கீழ் உரையாடிருக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கத்திற்கு இலக்காகினர் என தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை யாழில் கடந்த செவ்வாய்க்கிழமை மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்திருந்தனர்.

மன்னார் மாந்தைமேற்கு வண்ணாக்குளம் பகுதியிலும் வீடொன்றின் மீது மின்னல் தாக்கி வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது.

No comments