விண்வெளியில் வெடிகுண்டு போட்டு ஜப்பான் சாகசம்!

ஹாயபுசா-2  என்ற விண்கலம் ஜப்பானால் ஏவப்பட்டு  விண்வெளியில் ஆராட்சி செய்து வருகிறது. இது ஆராட்சியின் போது விண்கல் ஒன்றினை வெடிபொருளைக்கொண்டு  வெடிக்கச் செய்ததாக கூறப்படுகிறது.

'ரியுகு' என்று அழைக்கப்படும் அந்த விண்கல்லில் பூமி எப்படி தோன்றியிருக்கும் என்ற ஆராட்சிக்காகவே  குழி ஒன்றைத் தோண்டுவதற்க்காக  இந்த நடவடிக்கையை செய்ததாக அந்நாட்டு விண்வெளி நிறுவனம் தெரிவிக்கின்றது.
14 நிறையுடைய வெடிபொருளினால் 10 மீட்டர் அளவிலான பள்ளத்தை உருவாக்கவே இவ்முயர்ச்சி 500 மீட்டரில் இருந்து ஏவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் இப்படியொரு சாகசத்தை நிகழ்த்தியதையிட்டு ஜப்பான் சந்தோஷத்தில் இருக்கும் வேளையில்  உலக மக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.



No comments