மாகாணசபை தேர்தல் பற்றி வாய் திறக்க காணோம்?


ஜனாதிபதியும் பிரதமரும் அரசியல் மேடைகளில் மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து கருத்துத் தெரிவித்து வந்த போதிலும் இருவருக்கும் உண்மையில் தேர்தலை நடாத்த வேண்டும் என்ற எந்தத் தேவையும் இல்லாதிருப்பதாக பெப்ரல் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
ஏழு மாகாண சபைகளின் ஆட்சிக் காலம் நிறைவடைந்துள்ளது. மேல் மாகாண சபையின் ஆட்சிக் காலமும் இம்மாதம் 20 ஆம் திகதி நிறைவடைகின்றது. மாகாண சபைத் தேர்தல்களை நடாத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் சரியாயின் இதுவரையில் நிறைவடைந்திருக்க வேண்டும்.
இருப்பினும், எந்தத் தரப்பினருக்கும் இதற்கான தேவையில்லாது காணப்படுவதாகவும் அவ்வமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
தேர்தலை ஒத்திப் போடுவது ஜனநாயக விரோத செயலாகும். தேர்தலை வேண்டி நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டிய நிலையில், நீதிமன்ற செயற்பாடுகளிலும் நீண்ட காலம் எடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்பொழுது 9 மாகாண சபைகளிலும் 7 மாகாண சபைகள் ஆளுநர்களின் நேரடி அதிகாரத்தின் கீழ் இயங்கி வருகின்றது. மேல் மாகாண சபையும் எதிர்வரும் 20 ஆம் திகதியின் பின்னர் ஆளுநரின் கீழ் கொண்டு வரப்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்

No comments