திருகோணமலையில் 9 மீனவர்கள் கைது!

திருகோணமலைக் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 9 மீனவர்கள் சிறிலங்கா கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் நேற்றைய தினம் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவருமா 19 தொடக்கம் 44 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என கடற்படை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மூதூர் கடற்றொழில் திணைக்களத்தில் கையளிக்கப்பட உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments