ஓய்ந்து போனது புயல்: திருப்பதி போன மைத்திரி!


கொழும்பில் எதிர்பார்க்கப்பட்ட அரசியல் புயல் ஓய்ந்த நிலையில் தனது தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தூதுக்குழு,  இந்தியா-ஹைதராபாத்துக்கு சென்றுள்ளது.

இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான யு.எல்.177 விமானத்திலேயே, இக்குழு, இன்று காலை 7:40 க்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, திருப்பதியில் வழிபாடுகளில் ஈடுபடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கொழும்பில் புத்தாண்டின் பின்னராக நிகழலாமென எதிர்பார்க்கப்பட்ட அரசியல் பரபரப்பின் பின்னணியில் தனது திருப்பதி பயணத்தை மைத்திரி கைவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பகுதியினரை திரட்டி ஆட்சி மாற்றத்திற்கு மைத்திரி முற்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments