பாடசாலைகள் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை நீடிப்பு

தேசிய பாதுகாப்பு கருதி அனைத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களையும் எதிர்வரும் மே மாதம் 6ம் திகதி திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது.

இன்று கூடிய பாதுகாப்பு குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் 29ம் திகதி மீண்டும் திறக்க இதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments