வெட்கம் கெட்ட ரணில் - தீவிரவாதிகள் தொடர்பில் முன்னமே தெரியுமாம்


ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் இணைந்து கொண்டு நாடு திரும்பிய இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்கூட்டியே அறிந்திருந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்கை நியூஸ் சர்வதேச ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

எனினும் வௌிநாட்டு தீவிரவாத அமைப்பில் இணைவது இலங்கை சட்டப்படி சட்டவிரோதமற்றதென்பதால் அவர்களை கைது செய்ய முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

அத்துடன், நாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர்  தான் பதவியில் இருந்து விலகுவது தொடர்பில் தீர்மானிக்கவில்லை” என்றும் பிரதமர் கூறினார்.

No comments