குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு நல்லூரில் சர்வமத வழிபாடு


உயிா்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உயிாிழந்த அப்பாவி பொதுமக்களின் ஆத்ம சாந்திக்கான விசேட பூசை வழிபாடு மற்றும் ஆத்ம சாந்தி யாகம் ஆகியன இன்று நல்லுாா் கந்தசுவாமி ஆலயம் மற்றும் நல்லை ஆதீனத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சா்வமத தலைவா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனா். இன்று காலை 10 மணிக்கு சா்வமத தலைவா்கள் நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் ஒன்றுகூடி படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களுக்கான ஆத்மசாந்தி பூசை வழிபாடுகளை நடத்தினா்.

இதனை தொடா்ந்து நல்லை ஆதீனத்தில் ஒன்றுகூடிய சா்வமத தலைவா்கள் மற்றும் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட மக்களின் ஆத்ம சாந்திக்கான யாகத்திலும் கலந்து கொண்டனா்.

No comments