பொதியில் சி-4 ரக வெடிமருந்து! வெடிக்க வைக்கப்பட்டது பொதி!

கட்டான திம்பிரிகஸ்கட்டுவ பிரதேசத்தில் உள்ள வீதி ஒன்றுக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கிடந்த பொதி ஒன்று வான் படையினரால் பாதுகாப்பான முறையில் வெடிக்க வைக்கப்படுள்ளது.

இன்று புதன்கிழமை முற்பகல் 11 மணியளவில்  கட்டான, திம்பிரிகஸ்கட்டவ பகுதியில் அமைந்த சிற்றுண்டிச்சாலை ஒன்றில் இருந்தே சந்தேகத்திற்கு இடமான பொதி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கட்டான பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் வான் படையின் குண்டு செயலிழக்கும் படையினரால் அப்பொதியை பாதுகாப்பான இடம் ஒன்றுக்கு எடுத்துச் சென்று செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

வெடிக்க வைக்கப்பட்ட பொதியை சோதனைக்கு உட்படுத்தியபோது அதில் சி-4 ரக வெடிபொருள் இருந்தமை தெரியவந்துள்ளது என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments