கோத்தா முன்பதாக இன அழிப்பு கண்காட்சி!


இறுதி யுத்தத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட வட்டுவாகல் பாலத்தில் உத்தரிப்புக்களின் அல்பம் கண்காட்சி முன்னெடுத்துவரப்படுகின்றது.


நீதி – ஏக்கம் – கண்ணீர் எனும் தலைப்பிலான ஒளிப்படக் கண்காட்சியின் காண்பியல் 2 வட்டுவாகல் பாலம் முல்லைத்தீவில் இன்று காலை 9 மணி தொடக்கம் மாலை 5மணி வரை இடம்பெறுகின்றது.


கடந்த இரண்டு வருடங்களாக வடக்கு, கிழக்கெங்கிலும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றமை யாவரும் அறிந்ததே. அவர்களின் துயரத்தை ஒளிப்படங்கள் மூலம் ஆவணமாக்கிய ஊடகவியலாளர் கே.குமணன் முறைப்படுத்தப்பட்ட கண்காட்சியாக நடத்திவருகின்றார்.

அதிலும் இறுதி யுத்த சாட்சியங்களை மூடி மறைத்து வைத்துள்ள கோத்த கடற்படை தளம் முன்பதாக கண்காட்சி இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.





No comments